தொடர்புடைய செய்திகள்
- சனாதனத்தை எதிர்ப்பவர்கள் திமுகவில் உள்ள சர்வாதிகாரத்தை எதிருங்கள்: தமிழிசை செளந்திரராஜன்..!
- அமைச்சர் உதயநிதிக்கு உரிய பதிலடி தர வேண்டும்: அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி
- உதயநிதி மீது தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார்: எச். ராஜா பேட்டி..!
- உதயநிதிக்கு ஒரு சவால் விடுகிறேன், 2024 மற்றும் 2026 தேர்தல்களை சனாதன தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாமா?
- உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியார் மீது புகார்!
உதயநிதி ஸ்டாலின் ஒரு குழப்பவாதி. என்ன பேசவேண்டும் என்று தெரியாமல் பேசுகிறார்: அண்ணாமலை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு குழப்பவாதி என்றும் அவர் என்ன பேச வேண்டும் என்று தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மக்கள் என் மண் என்ற பயணம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று நடந்தது. அப்போது அவர் அங்கு பேசிய போது ஒன்பது ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஆனால் தமிழ்நாடு மதுபிற்பனை அரிவாள் கலாச்சாரம் கனிமவள கொள்ளை என மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
முதலமைச்சர் குடும்பம் மட்டுமே ஆட்சியை செய்து கொண்டிருக்கிறது என்றும் கூறிய அவர் திமுகவினருக்கு கோவில் உண்டியல் மீது மட்டுமே கலந்துள்ளது என்று தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் ஒரு குழப்பவாதி என்றும் அவர் என்ன பேச வேண்டும் என்று தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் சனாதான கொள்கையை திமுக மட்டுமல்ல யாராலும் ஒழிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
