தொடர்புடைய செய்திகள்
- கைதான அமலாக்கத்துறை அதிகாரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்
- ரூ.20 லட்சம் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி! பரபரப்பு தகவல்
- அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது.. ஞானசூனியமாக இருக்கிறார்! – சீதாராம் யெச்சூரி கடும் விமர்சனம்!
- ஆருத்ரா இயக்குநர் துபாயில் கைது.. தமிழக காவல்துறையின் கோரிக்கை ஏற்பு..!
- 5 மணி நேரம் விசாரணை; அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியேறினார் பொன்முடி..!
கைதான அமலாக்கத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை தேவை: அண்ணாமலை
மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில் கைதான அமலாக்கத்துடைய அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் விமான நிலையத்தில் தெரிவித்த அண்ணாமலை அதே நேரத்தில் ஒரு மனிதன் தவறு செய்வதை வைத்து ஒரு துறையை தவறு சொல்லக்கூடாது என்றும் அவருக்கு தெரிவித்தார்.
மேலும் அமலாக்கத்துறை அதிகாரி கைதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத்துறை முழுக்க தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதாகவும் விடிய விடிய அந்த அலுவலகத்தில் சோதனை நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சி.ஆர்.பி.எப் படையினரை தமிழக காவல்துறை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
Edited by Mahendran
