தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் உண்மையான கலாச்சாரத்தை அழிக்க துடிக்கிறார்கள்: ஆளுநர் ரவி
- அய்யா வைகுண்டர் பத்தி தெரியாம எதையாவது பேசக் கூடாது! – ஆளுநர் ரவிக்கு தலைமைபதி கண்டனம்!
- சிறு தவறு நடந்துவிட்டது: சீன கொடி விளம்பர சர்ச்சைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்..!
- தமிழக மீனவர்கள் மீது ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லை..! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்..!!
- ஆளுநர் ரவியை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்: திருமாவளவன் ஆவேசம்
ஆளுநர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு..!
ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாவை ஏற்கனவே ஒரு சில அமைச்சர்கள் புறக்கணித்த நிலையில் தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆளுநர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை வேப்பெறியில் நடைபெறும் கால்நடை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறும் நிலையில் இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் கால்நடை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஆளுநர் ரவி வந்துள்ள நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த விழாவை புறக்கணித்து விட்டதாக புறப்படுகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் 1166 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்ட உள்ளதாகவும் ஆளுநர் ரவியே இந்த விழாவை முழுமையாக நடத்தி பட்டங்களை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏன் புறக்கணித்தார் என்ற தகவல் தெரியவில்லை என்றாலும் இந்த விழாவை அவர் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
