1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:57 IST)

மதியம் வரைதான் க்ளாஸ்; விளையாட்டு நேரம் கிடையாது! – அமைச்சர் அன்பில் மகேஷ் கறார்!

நாளை முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விதிமுறைகள் குறித்து பேசியுள்ளார்.

கொரோனா காரணமாக திறக்கப்படாமல் இருந்த தமிழக பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. முதலாவதாக 9 முதல் 12 வகுப்பு வரையிலுமான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் விதிமுறைகள் குறித்து தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாணவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். வகுப்பறைகளில் கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும்.

ஒரு நாளில் 5 வகுப்பு நேரங்கள் செயல்படும். விளையாட்டு வகுப்பு கிடையாது.

காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பள்ளிகள் செயல்படும். வாரம் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும்

வகுப்பறைகளில் ஒரு பெஞ்சிற்கு இரு மாணவர்கள் இரு முனைகளில் வீதம் அமரவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.