1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Alagiri meeting with sellur raju

தன்னை பாராட்டிய செல்லூர் ராஜூ வீட்டிற்கு சென்ற அழகிரி....

Sellur raju
அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டிற்கு சென்று அவரை அழகிரி சந்தித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ “அழகிரியிடம் ஒரு ஆற்றல் இருக்கிறது. அதனால்தான், ஆயிரக்கணக்கானோர் அவர் நடத்திய பேரணியில் கலந்து கொண்டனர். இது அவருக்கு ஆதரவு இருப்பதை காட்டுகிறது” என பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், இன்று காலை மதுரையில் உள்ள செல்லூர் ராஜூவின் வீட்டிற்கு சென்ற அழகிரி அவரை சந்தித்து பேசினார். அப்போது, மரணமைடந்த செல்லூர் ராஜூவின் தாயின் உருவ படத்திற்கு அவர்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின் சிறுதி நேரம் அவரிடம் பேசிவிட்டு அழகிரி அங்கிருந்து கிளம்பி சென்றார்.
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி “செல்லூர் ராஜூவின் தாய் மரணமடைந்ததால் விசாரிக்க வந்தேன். நீங்கள் நினைப்பது போல் ஒன்றுமில்லை” எனக்கூறி விட்டு சென்றார்.
அடுத்த கட்டுரையில்
அழகு நிலையத்தில் பெண்ணை கடுமையாக தாக்கிய திமுக பிரமுகர் - வெளியான வீடியோ