1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஜனவரி 2022 (12:28 IST)

அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்
 
நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிட்டும் வரை அகவிலைப்படி உயர்த்தி வைக்கப்படும் என்று அறிவிப்பு வேதனை அளிக்கிறது என்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 மேலும் அரசு நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்த்தாமல் இருக்கும் அரசின் அலட்சிய போக்கு கண்டனத்துக்குரியது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்