வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (20:29 IST)

அண்ணி மேல் ஆசைப்பட்ட தம்பி: நடந்து முடிந்த கொடூரம்

தனது அண்ணன் மனைவியோடு தகாத உறவில் இருந்த ஒருவர், கடைசியாக அண்ணியையே குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வசிப்பவர் மணிகண்டன். திருமணமான இவருக்கு தனது அண்ணன் மனைவியோடு பழக்கம் இருந்துள்ளது. அண்ணன் இறந்துவிட்ட நிலையில் தனது இரண்டு குழந்தைகளோடு கிண்டியில் வசித்து வருகிறார் அவரது அண்ணி பானுப்பிரியா. கணவர் இல்லாததால் தனது மைத்துனரோடு தகாத உறவில் இருந்து வந்துள்ளார் பானுப்பிரியா. இதனால் மணிகண்டன் தனது அண்ணியை பார்க்க அடிக்கடி கிண்டிக்கு வந்து போவார்.

இந்நிலையில் பானுப்பிரியாவுக்கும் வேறொருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மணிகண்டனோடு பேசுவதை குறைத்து கொண்டுள்ளார். இந்த விஷயம் மணிகண்டனுக்கு தெரிய வந்திருக்கிறது. இன்று காலை கிண்டியில் உள்ள அண்ணி வீட்டுக்கு சென்ற மணிகண்டன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். வலியில் துடித்து கத்தியுள்ளார் பானுப்பிரியா.

அவரது கதறலை கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து மணிகண்டனை பிடித்தனர். பானுப்பிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.