1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Oracle Fires 3000 Employees in India

3000 இந்திய ஊழியர்கள் வேலைநீக்கம்: அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் அதிர்ச்சி முடிவு..!

ஆரக்கிள்
அமெரிக்க மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், இந்தியாவில் உள்ள சுமார் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக வெளியான தகவல் தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையால், சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட், வாடிக்கையாளர் மேலாண்மை மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற துறைகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஓப்பன்ஏஐ நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு பிறகு, ஆரக்கிள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் ஆரக்கிள் நிறுவனம் அதிக கவனம் செலுத்துவதால், பல ஊழியர்களின் பங்களிப்பு இனி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த பணிநீக்கத்தால், இந்தியாவில் உள்ள பல ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இது தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு நிலையற்ற சூழலை உருவாக்கியுள்ளது. ஆரக்கிள் போன்ற ஒரு பெரிய நிறுவனம் இந்த முடிவை எடுத்தது, மற்ற ஐடி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, மனித ஊழியர்களின் வேலைவாய்ப்பை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
 
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, மாற்று வேலைவாய்ப்புகளை தேடுவதற்கான ஆதரவை ஆரக்கிள் நிறுவனம் வழங்குகிறதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தவெக மாநாட்டில் இன்னொரு விபத்து.. 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்து கார் சேதம்..!