வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (09:01 IST)

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு: காவலர்களிடம் பிரச்சாரம் செய்ததாக புகார்

மக்களவை தேர்தல் தமிழகத்தில் நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது உச்சகட்ட பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சமீபத்தில் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் பணியில் இருக்கும் தேர்தல் அலுவலகர்கள், காவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில் தபால் வாக்குப்பதிவின்போது தேர்தல் விதிகளை மீறி காவலர்களிடம் பிரசாரம் செய்ததாக மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது
 
இந்த புகாரின் அடிப்படையில் மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது மதுரை செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது