1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 8 students confirmed for corona infection

8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ...

8 students confirmed
திருச்சி  மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து  விடுதிகள் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரொனா 2 வது அலை பரவி வருகிறது. இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு  வருகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கல்வி பயின்ற  8 மாணவர்களுக்கு கொரொனா தொற்று  உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 20 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பள்ளி மற்றும் விடுதிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளத்தாக திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்