1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (15:06 IST)

சென்னையில் 15 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்’

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவியுள்ள கொரொனா தொற்றின் தாக்கல் இன்னும் குறையும் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
 
இந்தியாவில் ஏழு லட்சத்தைத் தாண்டியுள்ளஹ்டு கொரொனா நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை. தமிழகத்தில் ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்  இனியொரு பொது ஊரடங்கு அமல்படுத்தும் எண்ணம் இல்லை என தமிழக முதல்வர் கூறியுள்ளார். 
 
தற்போது தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் அரசு சில கட்டுப்ப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில், செண்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் பகுதியில் சில போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது :
சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நாளை முதல் 25 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்  செய்யப்படவுள்ளதாகவும்,  ஈவினிங் பஜார் சாலையில் இருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.