1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:54 IST)

ஜனவரி 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு - மஹாராஷ்டிர அரசு

இந்தியாவில் ஏற்கனவே கொரொனா தொற்று பரவி வரும் நிலையில், தற்போது ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.  இதைத் தடுக்க மத்திய அரசு  மாநில அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஜனவரி 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவிட்டுள்ளது மா நில அரசு.

மேலும், வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை மாலை 5 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை கடற்கரை, திறந்தவெளி மைதானங்கள், பூங்க்கா போன்ற பொது இடங்களுக்கு  தடைவிதிக்கப்பட்டுள்ளது.