தொடர்புடைய செய்திகள்
- கொரோனா கண்டறியப்பட்டால் கட்டாய தனிமை - டெல்லி அரசு!
- அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கூட்டம்: தமிழக நிதியமைச்சர் கலந்து கொள்வாரா?
- ஒரு பெட்டியில் 25 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி: டெல்லி மெட்ரோ உத்தரவு
- டெல்லியில் பதுங்கியுள்ள ராஜேந்திர பாலாஜி..? – விரைந்தது தனிப்படை!
- இந்தியாவில் 781 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு; முதல் இடத்தில் டெல்லி!
ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு தள்ளிவைப்பு!!
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.
பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஒரு சில பொருட்களுக்கான வரி குறைப்பு, ஜவுளிக்கான வரி உயர்வு ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை தள்ளிவைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது. ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5%ல் இருந்து 12% ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தக்கூடாது என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
