1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : புதன், 4 டிசம்பர் 2019 (13:17 IST)

திருட்டு நகைகள் போலீஸாரிடமே உள்ளது; கொள்ளையன் பகீர்

லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு கிலோ போலீஸாரிடமே உள்ளதாக கொள்ளையன் சுரேஷ் பேட்டியளித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளைப்போனது. இதனை தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மணிகண்டனை போலீஸார் கைது செய்தது.

இதனை தொடர்ந்து இவர்களுடன் சம்பந்தப்பட்ட சுரேஷ், முருகன் ஆகியோரை போலீஸார் தேடி வந்த நிலையில் சில நாட்களிலேயே இருவரும் போலீஸாரிடம் சரணடைந்தார். இந்நிலையில் கொள்ளையடித்த நகைகளில் ஒரு கிலோ தங்க நகைகள் போலீஸாரே எடுத்துக்கொண்டனர் என கொள்ளையன் சுரேஷை பேட்டியில் தெரிவித்துள்ளார். இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.