1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Does adding ghee to the daily diet relieve physical fatigue...?

அன்றாட உணவில் நெய் சேர்ப்பதால் உடல் சோர்வை போக்கிடுமா...?

நெய்
நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம். மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
 
ஞாபக சக்தியை தூண்டும். சரும பளபளப்பைக் கொடுக்கும். கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
 
சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே காரணமாகும். இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
 
குடற்புண் கொண்டவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.
 
தினமும் அன்றாட உணவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்ப்பதால் வயிறு உப்பிசம் மற்றும் தொடர் ஏப்பம் அஜீரணக்கோளாறு போன்றவற்றை குணம் செய்கிறது. பசியின்மையை போக்கி பசியை தூண்டும் சக்தி நெய்க்கு உள்ளது. எலும்பு தேய்மானத்தை குணம் படுத்தும் வல்லமை உள்ளது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
உடல் எடையை குறைக்க உதவும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!