1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
  4. doctors found why feeling tired after fourty age

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

health
ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்குமே 40 வயதுக்கு மேல் உடலில் ஒரு விதமான சோர்வு வந்துவிடும். உடல் ஆக்டிவாகவே இருக்காது. எப்போதும் உடல் மந்தமாகவே இருக்கும்.. சுறுசுறுப்பாக எந்த வேலையும் செய்ய முடியாது. 60 வயது ஆகிவிட்டது போல மனம் சோர்வு பெறும்.

இந்நிலையில்தான் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி உடல் சோர்வை உணர்வதற்கு முதுமை ஒரு காரணமாக இருந்தாலும் வாழ்வியல் அழுத்தங்களும் முக்கிய காரணம் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது..

குடும்பம் மற்றும் வேலை என வாழ்வின் அதிகப்படியான பொறுப்புகள் 40 வயதில் ஏற்படுவதால் மூளை அதிக ஆற்றலை உட்கொள்வதாக லண்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்..

நுணுக்கமான உயிரியல் மாற்றங்களும் சோர்வுக்கு ஒரு காரணமாக இருந்தாலும், 30 வயது முதலே உடல் தசைவுகளின் அளவு குறைய தொடங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பெண்களின் ஹார்மோன் மாற்றங்களும், ஆண்களின் மன அழுத்தமும் இந்த சோர்வை இரட்டிப்பாக மாற்றுகிறது எனவும் அவர்கள் கூறுகிறார்கள்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...