1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (16:28 IST)

அவகோடா பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

அவகோடா பழத்தில் உள்ள வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. மேலும் உடல் உறுதி பெற உதவுகிறது.


வயிற்றில் அதிகமாக புளிப்புத் தன்மையுள்ள பொருட்கள் சேர்ந்து வயிற்று வலி ஏற்பட்டால், பழுத்த பப்பாளி பழத்துடன் அவகோடா பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலி உடனே குணமாகும். இதே போல் ஐந்து நாட்களுக்கு சாப்பிட வேண்டும். இதனால் வயிற்று வலி பூரணமாக குணமாகும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் புண், வீக்கம் போன்றவற்றை குணமாக்க பழுத்த பப்பாளி பழத்துடன் அவகோடா பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

சொறி சிரங்கு உள்ளவர்கள் அவகோடா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யையும் உடம்பில் தேய்த்து வர வேண்டும்.

தோல் நோயால் அவதிப்படுபவர்கள் அவகோடா பழத்திலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை உடம்பு முழுவதும் நன்கு தேய்த்து குளித்து வர வேண்டும்.

அவகோடா பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றம் இருக்காது. இந்த பழம் குடல்களை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றிவிடுவதால் வாய் துர்நாற்றம் அகன்று விடும்.