செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முருங்கைக்கீரை சூப் தொடர்ந்து குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

தினமும் முருங்கைக்கீரை சூப்பை குடித்து வருவதால் உடலில் ரத்தசோகை ஏற்படாது. இதனால் உடலில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வரலாம். மேலும் உடலில் ரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை கீரை சூப் குடிக்க வேண்டும்.

முருங்கைக்கீரை சூப்பானது மிகவும் ஆரோக்கியமானது. எடை குறைக்க நினைப்பவர்களும் இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளலாம்.
 
இதனை பெண்கள் தொடர்ந்து 20 அல்லது 25 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் வித்தியாசத்தை உணர முடியும். அந்த அளவுக்கு இந்த முருங்கை கீரை சூப் சத்துள்ளது.
 
முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
 
நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியதுமாகும். நீங்களும் உங்களது வீட்டிலேயே இந்த எளிமையான ஆரோக்கியமான முருங்கைக்கீரை சூப் செய்து குடித்து  பயனடையுங்கள்.
 
முருங்கைக்கீரை சூப் தொடர்ந்து குடித்து வருவதால் நம் உடலில் ஆஸ்துமா நோய் ஏற்படாது. இதனால் ஆஸ்துமா நோய் ஏற்படாமல் இருக்க முருங்கைக்கீரை சூப்  தொடர்ந்து கொடுத்து வரலாம். மேலும் ஆஸ்துமா உள்ளவர்கள் தினமும் முருங்கை கீரை சூப் குடித்து வரலாம்.