ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (16:11 IST)

ஒரு கோடி முறை 'கோவிந்தா' என எழுதினால் திருப்பதியில் குடும்பத்துடன் வி.ஐ.பி. தரிசனம்: தேவஸ்தானம்!

tirupathi
ஒரு கோடி முறை 'கோவிந்தா' 'கோவிந்தா' என்று எழுதினால் குடும்பத்துடன் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம்தெரிவித்துள்ளது. 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி முறை கோவிந்தா கோவிந்தா என கைப்பட எழுதி அனுப்ப வேண்டும் என்றும் அவ்வாறு எழுதி கொண்டு வந்தால் குடும்பத்துடன் விஐபி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  
 
மேலும் 10,01,116ம் முறை  கோவிந்தா கோவிந்தா என்று எழுதி வந்தால் ஒருவருக்கு மட்டும் விஐபி தரிசனம் செய்யப்படும் என்று அனுமதிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran