1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Woman sprayed acid on stalker

பின் தொடர்ந்து வந்த நபர் – தொல்லை தாங்காமல் இளம்பெண் செய்த செயல் !

ஆசிட் வீச்சு
உத்தர பிரதேச மாநிலத்தில் தனனை பின் தொடர்ந்து வந்த ஆணின் மீது ஆசிட் வீசியுள்ளார் ஒரு பெண்.

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் என்ற பெண்ணிடம் அதேப் பகுதியைச் சேர்ந்த ரோஹித் யாதவ் என்ற 25 வயது இளைஞர் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்தப்பெண் அவரைக் காதலிக்க வில்லை என சொல்லியுள்ளார். ஆனாலும் விடாத அந்த இளைஞர் அந்த பெண்ணை தொடர்ந்து தினமும் தொல்லைக் கொடுத்து வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தனனைப் பின் தொடர்ந்து வந்த அந்த நபரின் மேல் அப்பெண் ஆசிட்டை ஊற்றியுள்ளார். இதனால் அந்த இளைஞரின் முகம், நெஞ்சு ஆகிய சில இடங்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.