வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 ஜூன் 2019 (09:08 IST)

சஞ்சய்தத்தை விடுதலை செய்தது யார்? ஆர்டிஐ கொடுத்த அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி சிறைதண்டனை அனுபவித்த நிலையில் தண்டனைக்காலம் முடியும் முன்னரே நன்னடைத்தை காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
 
இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் 'தண்டனைக்காலத்திற்கு முன்னரே சஞ்சய்தத்தை விடுதலை செய்தது யார்? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
 
பேரறிவாளனின் இந்த கேள்விக்கு தற்போது ஆர்.டி.ஐ பதில் கூறியுள்ளது. சஞ்சய்தத்தை விடுதலை செய்தது மகாராஷ்டிர மாநில அரசுதான் என்றும், சஞ்சய்தத்தை விடுதலை செய்ய மத்திய அரசு நிராகரித்த 55 நாட்களில் மாநில அரசு சஞ்சய் தத்தை விடுவித்துள்ளது என்றும் பதில் கூறியுள்ளது.
 
அதேபோல் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதிக்காவிட்டாலும் மாநில அரசு தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யலாம் என்பதே பேரறிவாளனின் வாதமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆர்.டி.ஐயின் இந்த தகவலை அடுத்து பேரறிவாளனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்