வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (12:52 IST)

டெல்லியில் மேலும் இருவருக்கு குரங்கு அம்மை: மருத்துவமனையில் அனுமதி

Monkey Pox
டெல்லியில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு நோய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக குரங்கு அம்மை நோய் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் கேரளாவில் 3 பேருக்கும் ஆந்திரா மற்றும் டெல்லியில் தலா ஒருவர் என மொத்தம் ஐந்து பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது
 
கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் செய்தி வெளியானது. 
இந்த நிலையில் தற்போது டெல்லியில் மேலும் இருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதை அடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஏற்கனவே டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பரவிய நிலையில் தற்போது மேலும்  ஒருவர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது