தொடர்புடைய செய்திகள்
- திருப்பதிக்கே நாமமா? உண்டியலில் கைவரிசை காட்டிய நபர்! – திருப்பதியில் அதிர்ச்சி!
- கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் யா? பாஜக பிரமுகர் டுவிட்!
- இன்று மாலை சூரிய கிரகணம்: வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என எச்சரிக்கை!
- நாளை 12 மணி நேரம் மூடப்படும் திருப்பதி கோயில்!
- தமிழக மாணவர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் தொடுப்பதா? சீமான்
திருப்பதி கோவிலில் மொட்டை போட முடியாமல் பக்தர்கள் அவதி: என்ன காரணம்?
திருப்பதி கோவிலில் மொட்டை போடும் நாவிதர்கள் திடீரென போராட்டம் செய்ததால் பக்தர்கள் மொட்டை போட முடியாமல் அவதி அடைந்ததாக கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செய்யும் பக்தர்களிடம் நாவிதர்கள் பணம் வாங்கக்கூடாது என்று தேவஸ்தானம் கூறி உள்ளது. ஆனால் பக்தர்கள் தாமாக முன்வந்து அவர்களுக்கு பணம் கொடுப்பதை அவர்கள் வாங்கி வருகின்றனர்
இந்த நிலையில் நாவிதர்களை கண்காணிக்க அவர்களின் ஆடையை களைந்து அதிகாரிகள் சோதனை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவர்களிடமிருந்து பணம் இருந்தால் அவை பறிமுதல் செய்யப்படுகிறது
இதனால் ஆத்திரமடைந்த நாவிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேவஸ்தான அலுவலகம் முன்பாக திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நாவிதர்களின் போராட்டம் காரணமாக சில மணி நேரம் பக்தர்கள் மொட்டை போட முடியாமல் அவதி அடைந்ததாக கூறப்படுகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
