1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (11:30 IST)

வாரத்தின் முதல் நாளே மீண்டும் சரிந்தது பங்குவர்த்தகம்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

பங்குச் சந்தையில் கடந்த சில நாட்களாகவே சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அதில் முதலீடு செய்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் மீண்டும் பங்குச் சந்தை சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இன்றைய பங்குச்சந்தை ஆரம்பம் முதலே சரிந்துள்ள நிலையில் சற்று முன்வரை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 57 ஆயிரத்து 900 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 17313 என்ற புள்ளியில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் ஓரிரு நாட்கள் பங்குச் சந்தை உயர்ந்ததை அடுத்து மீண்டும் பங்குச் சந்தை உச்சத்திற்கு சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது