1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (09:23 IST)

தொடர்ந்து 2 ஆயிரத்திற்கு மேல் நீடிக்கும் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக வேகமாக குறைய தொடங்கிய கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,593 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,25,19,479 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,22,193 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,19,479 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 15,873 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.