தொடர்புடைய செய்திகள்
- தரிசனத்திற்கு லட்சக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள்! – விழி பிதுங்கும் திருப்பதி!
- 35 மணி நேர காத்திருப்பு: பக்தர்களை சோதிக்கும் ஏழுமலையான்!
- திருப்பதி மலையில் மனைவியை தோளில் சுமந்து சென்ற கணவன் !வைரலாகும் புகைப்படம்
- ரூ.85,705 கோடியா? பணக்கார கடவுள் ஏழுமலையானின் சொத்து மதிப்பு!!
- திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: குவிந்த பக்தர்கள்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 மணிநேரம் நடை சாத்தப்படுகிறது: என்ன காரணம்?
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நடை 12 மணி நேரம் சாத்தப்படும் என்றும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணமும் நவம்பர் 8-ஆம் தேதி சந்திர கிரகணம் அடுத்தடுத்து வர இருப்பதை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவில் கிரகணத்தின் போது நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
அக்டோபர் 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ இருப்பதால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படும்
அதேபோல் நவம்பர் 8-ந் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளதால் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும்
இந்த அறிவிப்பை பொருத்து பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய திட்டமிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
