1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 ஜூலை 2020 (07:02 IST)

மகள்களின் உதவியால் நிலத்தை உழுத விவசாயி வீட்டின் முன் டிராக்டர்: நடிகர் செய்த உதவி!

ஆந்திர மாநிலத்தில் உள்ள தக்காளி விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு வாடகைக்கு காளைகளை வாங்க கூட பணம் இல்லாததால் தனது இரண்டு மகள்களின் உதவியால் நிலத்தை உழுதார் என்றும், இதுகுறித்த வீடியோ நேற்று இணையதளங்களில் வைரல் ஆனது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த நடிகர் சோனு சூட் அந்த விவசாயிக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் அவர் குறித்த தகவல்களை உடனடியாக அனுப்பவும் என்றும் நாளையே அந்த விவசாயியின் வீட்டின் வாசலில் இரண்டு காளைகள் நிற்கும் என்றும் தெரிவித்திருந்தார் 
 
மகள்களின் உதவியால் நிலத்தை உழுத விவசாயி வீட்டின் முன் டிராக்டர்
இதனால் அந்த விவசாயியும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி தற்போது பல மடங்காக உயர்ந்துள்ளது. ஆம் காளை மாடுகள் வாங்கி தருகிறேன் என்று சொன்ன நடிகர் சோனு சூட் தற்போது ஒரு புதிய டிராக்டரை வாங்கி அந்த விவசாயிக்கு கொடுத்துள்ளார். நேற்று அவரது வாசலில் சோனு சூட் வாங்கி கொடுத்த புத்தம் புது டிராக்டர் நின்றது. 
 
நேற்றுவரை இரண்டு காளை மாட்டை வாடகைக்கு எடுக்க கூட பணம் இல்லாமல் இருந்த அந்த விவசாய குடும்பத்தினர் இன்று ஒரு டிராக்டருக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அந்த விவசாயி குடும்பத்தினர் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர். மேலும் நெட்டிசன்களும் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.