1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. siya goyal and chetan choudhry got married before

புனே தொழிலதிபர் கொலை!.. ரகசிய திருமணம் செய்து கொண்ட சியா கோயல் - சேத்தன் சவுத்ரி!..

siya goyal
புனேவை சேர்ந்த இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வாலை அவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண்ணே தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேத்தன் அகர்வாலுக்கும் சியா கோயல் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்ற வந்தது.

அப்போது லோகட் என்கிற ஒரு இடத்திற்கு கேத்தனை அழைத்துச் சென்று அந்த மலை உச்சியில் இருந்து அவரை சியா கோயல்  தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில் சியா கோயல் சேத்தன் சவுத்ரி என்பவரை காதலித்து வந்ததும்,  திருமணத்திலிருந்து தப்பிப்பதற்காக இருவரும் சேர்ந்து கேத்தனை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது..

இந்நிலையில்தான் போலீசாரின் விசாரணையில் ஒரு பகீர் தகவல் வெளிவந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட சியா மற்றும் சேத்தன் ஆகிய இருவரும் நான்கு மாதங்களுக்கு முன்பே ரகசிய திருமணம் செய்து கொண்டது டிஜிட்டல் தடவியல் ஆய்வில் உறுதியாகியிருக்கிறது. அதோடு கொலையை செய்ய அவர்கள் பல க்ரைம் வெப் சீரியஸ்களை பார்த்ததும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.

இவர்களின் வாட்ஸ்அப் சேட் மற்றும் சேர்ச் ஹிஸ்டரி மூலம் இந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஏற்கனவே சேத்தன் சவுத்ரிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.