1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. siya goyal given one crore to boy friend chettan choudhry

காதலனுக்கு ஒரு கோடி!.. சியா கோயல் போட்ட செம ஸ்கெட்ச்!.. ஒரு உசுரு போயிடுச்சே!..

siya goyal
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கேத்தன் அகர்வாலுக்கும், சியா கோயல் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஆனால் அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சியா கோயல் தனது வருங்கால கணவன் கேத்தன் அகர்வாலை தனது காதலலுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த 18ம் தேதி லோஹாகாட் என்கிற மலை உச்சிக்கு கேத்தனை கூட்டிச் சென்று சியா கோயல் மற்றும் அவரின் காதலன் சேத்தன் சவுத்ரி இருவரும் சேர்ந்து கேத்தனை மலையிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்திருக்கிறார்கள். அதன்பின் செல்பி எடுக்கப் போனபோது கேத்தன் தவறி கீழே விழுந்துவிட்டதாக எல்லோரிடமும் சியா கோயல் சொல்லிவிட்டார். ஆனால் போலீசாரின் விசாரணையில் உண்மை தெரிய வந்திருக்கிறது. தற்போது ஷியா கோயல் மற்றும் சேத்தன் சவுத் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்..

மேலும், இந்த கொலையை எப்படி செய்தார்கள் என சமீபத்தில் அவர்கள் இருவரும் போலீசாரிடம் நடித்தும் காட்டினார்கள். அவை வீடியோவாக பதிவி செய்யப்பட்டது. இந்நிலையில்தான் திருமண செலவுக்காக வருங்கால கணவர் கேத்தனிடம் ஒரு கோடி ரூபாய் பெற்று அதை சியா கோயல் தனது காதலனிடம் கொடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.