1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. parents killed their own child in bangalore

கள்ளக்காதல் விவகாரம்!. 11 வயது குழந்தையை அடித்து கொலை செய்த பெற்றோர்!..

bangalore
கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களூரில் கிட்டகனூர் என்கிற கிராமத்தில் வசித்து வருபவர் சேகப்பா. இவரின் மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 11 மாதத்தில் ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த மாதம் 9ம் தேதி தங்கள் குழந்தை கீழே விழுந்துவிட்டதாக கூறி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் இருவரும் அனுமதித்தனர்.

ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் போது படுக்கையிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாக விஜயலட்சுமி கூறியிருக்கிறார். எனவே போலீசார் இதை இயற்கைக்கு மாறான மரணமாக பதிவு செய்தனர்..

ஆனால் பிரேத பரிசோதனையில் குழந்தை உடலில் உள்காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், குழந்தையின் முகம்ம் மார்பும் கால்கள் மற்றும் பிறப்புறுப்பில் நிறைய காயங்கள் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் இருந்தது. எனவே சேகப்பா மற்றும் விஜயலட்சுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்..

விஜயலட்சுமிக்கு வேறொருவருடன் தகாத உறவு இருந்திருக்கிறது. இதனால் தனது குழந்தைகளின் மீது அன்பு காட்டாமல் இருந்திருக்கிறார். சம்பவத்தன்று இது தொடர்பாக சேகப்பா - விஜயலட்சுமிக்கு இடையே சண்டை ஏற்பட்ட போது குழந்தை அழுதிருக்கிறது.. அப்போது விஜயலட்சுமி குழந்தையை எட்டி உதைத்திருக்கிறார்.. சேகப்பா குழந்தையை தூக்கி பலமாக தரையில் வீசியிருக்கிறார். அதில்தான் குழந்தை இறந்திருப்பது தெரிய வந்தது. இதையடுட்து சேகப்பா, விஜயலட்சுமி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.,