1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Sitaram Yechuri says about ramar temple

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா பெயரில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி: சீதாராம் யெச்சூரி!

அயோத்தி ராமர் சிலை
அயோத்தியில் ராமர் கோவில் திருவிழா என்ற பெயரில் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி நடப்பது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்  
 
ஒவ்வொரு கட்சிக்கும் சமூக நல்லிணக்கத்தை பேண உரிமை உண்டு என்றும் வகுப்பு வாதமோ, பிரிவினவாதமோ கட்சியின் கொள்கையாக இருக்கக் கூடாது என்றும் கூறிய சீதாராம் யெச்சூரி அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா மூலம் நாட்டை பிளவுபடுத்த முயற்சி நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 
 
அரசியல் கட்சிகள் மத அடிப்படையில் இயங்கக்கூடாது என்றும் மத நல்லிணக்கம் மற்றும் அரசியல் அமைப்பின் கொள்கைகளை பாதுகாக்க ஒவ்வொரு கட்சியும் பாடுபட வேண்டும் என்றும் பாஜக இந்த விழாவை உண்மையான சுதந்திரம் நிறைவேறிய கனவு என்று  குறிப்பிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சிக்கும் பாஜகவுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்,
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்