1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (09:30 IST)

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: மீண்டும் 60 ஆயிரத்திற்கும் மேல் சென்ற சென்செக்ஸ்!

Share
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 275 புள்ளிகள் உயர்ந்தது 60060 என உயர்ந்துள்ளது. மீண்டும் 60 ஆயிரத்துக்கு மேல் சென்செக்ஸ் சென்றுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 17910 என்ற புள்ளிகளில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக உயர்ந்து வருவது அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது