ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (20:18 IST)

துணைமுதல்வர் அஜித் பவாரை கட்சியை விட்டு நீக்கிய சரத்பவார் !

இன்று பாஜகவின் ஃபட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாஜவுக்கு ஆதரவாக செயல்பட்ட அஜித் பவார் கட்சியைவிட்டு நீக்கி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ( பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக  ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங். கூட்டாக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. 
 
மேலும், ஆளுநரின் முடிவு அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது என சிவசேனா விமர்சித்துள்ளது. அதனால் மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில்,பாஜவுக்கு ஆதரவாக செயல்பட்ட அஜித் பவார் கட்சியைவிட்டு நீக்கி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
 
இன்று, மும்பையில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அஜித்பவாரை நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.