தொடர்புடைய செய்திகள்
- உத்தராகண்ட் பனிச்சரிவு: காணாமல் போன 170 பேர் நிலைமை என்ன ஆனது?
- உத்தரகாண்ட் பனிச்சரிவு - வெளிநாடுகள் இரங்கல்!!
- உத்தரகாண்ட் மாநிலத்தில் குழந்தையைக் கொன்ற சிறுத்தை
- வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் எத்தனை பேர்??அதிர்ச்சி தகவல்
- 2021 சென்சஸ் பணிகளுக்காக எத்தனை கோடி நிதி ஒதுக்கீடு? உள்துறை அமைச்சகம் தகவல்!
5,600 மீ உயரத்தில் சரிவு: உத்தராகண்ட் திடீர் வெள்ளத்திற்கு இதுவா காரணம்?
பனி சரிந்தே திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக இந்தியன் ரிமோட் சென்சிங் இன்ஸ்டிடியூட் சார்பில் உத்தராகண்ட் அரசிடம் அறிக்கை.
உத்தராகண்ட் திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 5 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போன 170 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே திடீர் வெள்ளப் பெருக்குக்கு பனிச்சரிவே காரணம் என தெரியவந்துள்ளது.
திடீர் வெள்ளத்துக்கு பனிப்பாறை ஏரி வெடிப்பு காரணமாகக் கூறப்பட்டது. இதன் பின்னர் இதுதொடர்பாக ஆய்வுசெய்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், இந்தியன் ரிமோட் சென்சிங் இன்ஸ்டிடியூட், பனிச்சரிவு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.
ரிஷி கங்கா நீர் பிடிப்பு பகுதியில் 5,600 மீட்டர் உயரத்தில் புதிதாக உருவான பனி சரிந்தே திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக இந்தியன் ரிமோட் சென்சிங் இன்ஸ்டிடியூட் சார்பில் உத்தராகண்ட் அரசிடம் அறிக்கை அளித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
