1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (08:22 IST)

உத்தரகாண்ட் பனிச்சரிவு - வெளிநாடுகள் இரங்கல்!!

உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் நேபாள வெளியுறவுத்துறை இரங்கல். 

 
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக தௌலிங்கா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகமானது. இதனால் கரையோரம் தங்கியிருந்தவர்களின் குடிசைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனால் சுமார் 150 பேர் வரை மாயமாகியுள்ளனர். இதுவரை மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
தௌலிங்கா நதிக்கரை பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் நேபாளம் நாட்டின் வெளியுறவுத்துறை இரங்கல் தெரிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக, அந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தோம். உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். மாயமானவர்களை விரைந்து மீட்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.