வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (18:09 IST)

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.29 அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி..!

tirupathi
திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக 3.29 கோடி ரூபாய் அபராதம் வைத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் 30 கோடி வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. 
 
மேலும் வெளிநாட்டு பணம் குறித்து சரியான விளக்கம் அளிக்காத காரணத்தால் தேவஸ்தானத்திற்கு ரூபாய் 3.29 கோடி அளவிற்கு அபராதம் விதிது உள்ளதாகவும் தெரியவந்துள்ளது
 
வெளிநாட்டு பணத்தை நன்கொடையாக கொடுத்த நபர்களின் பெயர்கள் குறித்த பட்டியல் தேவஸ்தானத்திடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran