1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (18:38 IST)

மாநிலங்களுக்கான அதிகாரங்கள் டெல்லிக்கு பொருந்தாது;உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

டெல்லி யூனியன் பிரதேசம்தான், மாநிலங்களுக்கான அதிகாரங்கள் அதற்கு பொருந்தாது என்றும், டெல்லிக்கான சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்றும், இந்த மசோதா சட்ட ரீதியாக சரியானதே என்றும், டெல்லி நிர்வாக திருத்த மசோதா' விவாதத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், நியமன எம்.பி.யுமான ரஞ்சன் கோகாய் இன்று நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
 
இந்த நிலையில் மாநிலங்களவையில் ’டெல்லி நிர்வாக திருத்த மசோதா’ விவாதத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியபோது, ‘கடைசி குடிசையில் தீ எரிந்தால், முதல் குடிசையில் இருப்பவனும் ஓடிச் சென்று அதை அணைக்க முயற்சிப்பான்; அதை செய்யவில்லை என்றால் தன் குடிசையும் எரியும் என அவனுக்கு தெரியும்; டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கும் மசோதாவை ஆதரிக்கும் பிற கட்சி எம்.பி.க்களுக்கு நான் இதையே கூறிக்கொள்கிறேன் என்று கூறினார்,
 
இந்த நிலையில் மாநிலங்களவையில் ’டெல்லி நிர்வாக திருத்த மசோதா’ மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. சிதம்பரம் பேசியபோது, ‘மாநிலங்கள் ஒருங்கிணைந்த நாடாக இருக்கப் போகிறோமா அல்லது மாநகராட்சிகள் ஒருங்கிணைந்த நாடாக இருக்கப் போகிறோமா? கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்து தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை பறித்து அதிகாரம் இல்லாதவையாக மாற்றுவதை எப்படி புரிந்துகொள்வது? என்று கூறினார்.
 
Edited by Siva