தொடர்புடைய செய்திகள்
- மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!
- தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!
- பாராளுமன்ற கூட்டத்தொடரின் நடுவே ராகுல் காந்தி ஜெர்மனி பயணம்: வெளிநாட்டு நாயகன் என பாஜக விமர்சனம்..!
- வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்
- மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி
சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா
நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்த விவாதத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா, "சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்" என்று குற்றஞ்சாட்டினார். இது அமித்ஷாவுக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையே கடுமையான வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து இன்று பேசிய ராகுல் காந்தி, "விவாதத்தின் போது நான் குறுக்கிட்டதால் அமித்ஷா பதற்றம் அடைந்தார். நான் வெளிப்படையாக சவால் விடுத்தும், என்னுடைய குற்றச்சாட்டுகளை மறுக்க அமித்ஷாவிடம் ஆதாரங்களோ, பதில்களோ இல்லை" என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பேசும்போது ராகுல் வெளிநடப்பு செய்கிறார். உண்மையை கேட்க அவருக்கு வலிமை இல்லை. அமித் ஷாவின் பேச்சால் முழு நேரு குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது" என்று பதிலடி கொடுத்தார்.
நாடாளுமன்ற மோதல் இப்போது இரு கட்சிகளின் தனிப்பட்ட மோதலாக மாறியுள்ளது.
Edited by Mahendran
