வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (20:03 IST)

திருப்பதி தேவஸ்தானத்தில் மதம் மாறியவர்களுக்கு சிக்கல்.. ஆந்திர அரசு அதிரடி !

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்வதற்காக குவிகிறார்கள். அங்கு காணிக்கை மூலம் பலகோடி வருமானம் வருகிறது. அதனால் உலகில் பணக்கார கடவுள் என அழைக்கப்படுகிறது. 
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான பணிகளில், இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் இனிமேல் அங்கு பணில் நீடிக்க முடியாது என ஆந்திர முதன்மைச் செயலாளர் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து ஆந்திர மாநில முதன்மைச் செயலாளர் எல்.வி. சுப்ரமணியன் கூறியதாவது : இது மதத்தில் இருந்து தற்போது மதம் மாறியவர்கள் இனிமேல் பணிகளில் நீடிக்க முடியாது என்று தெரிவித்தார். 
 
மேலும் இந்து மத சம்பிரதாயங்களை அங்கு பணியாற்றுவோர் கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணுக்கவே ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.