1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (07:16 IST)

ஆட்சிக்கு வந்தால் மாதம் மாதம் 200 யூனிட் இலவசம்: ப்ரியங்கா காந்தி

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் என்றும் மாநிலம் முழுவதும் உள்ள பெண்களுக்கு மாதம் ரூபாய் இரண்டாயிரம் ஊதியம் வழங்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்
 
அசாம் உள்பட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்தி நேற்று அசாமில் தீவிர பிரச்சாரம் செய்தார் தேஜ்பூர் என்ற இடத்தில் நடந்த பிரச்சாரத்தில் அவர் பேசியபோது ’வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு மாதம் ரூபாய் 2000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்
 
மேலும் 25 லட்சம் தனியார் துறை வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி மாதம் 200 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அசாம் மாநிலத்தில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்வோம் என்றும் வாக்குறுதி கொடுத்தார். பிரியங்கா காந்தியின் அதிரடியான இந்த வாக்குறுதிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது