வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (18:06 IST)

போலிஸிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த நண்பர்கள்… இறுதியில் நடந்த விபரீதம்!

அஸ்ஸாமில் போதை மருந்து பயன்படுத்தியவர்களை போலிஸார் கைது செய்ய முயன்ற போது ஆற்றில் குதித்த இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள நாகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தேபாசிஸ் தாஸ் என்ற இளைஞரும் அவரது நண்பர்களும் சேர்ந்து கோயிலில் அமர்ந்து போதைப் பொருளை நுகர்ந்துள்ளனர். அப்போது அங்கு வந்த போலிஸார் அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். இதனால் இளைஞர்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகில் இருந்த நிஷாரி என்ற ஆற்றில் குதித்துள்ளனர்.

இதில் நான்கு இளைஞர்கள் மறுகரைக்கு வந்துவிட தேபாதிஸ் மட்டும் காணவில்லை. இதையடுத்து பொலிஸார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக என் டி ஆர் எஃப் மற்றும் எஸ் டி ஆர் எஃப் குழுக்கள் வரவழைக்கப்பட்டன. தீவிர தேடுதலுக்குப் பிறகு தேபாதிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.