வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2020 (21:42 IST)

தவறான தகவல் பரப்பியதாக தனியார் செய்தியாளர் கைது !

மும்பையில் உள்ள பந்த்ராவில் நேற்று தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து  தவறான தகவல் பரப்பியதாக ஒரு செய்தியாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொரோனாவை  தடுக்கும் பொருட்டு இந்திய அரசு வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று மும்பையில்  தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்குப் போவதாகச் சொல்லிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தவறான தகவலை பரப்பியதாக தொலைக்காட்சி பத்திரிகையாளர் ராகுல் குல்கர்னியை மும்பை போலீஸ் கைது செய்துள்ளனர்.