1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (08:37 IST)

மாஸ்க் அணிந்து ஹோலி கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்

வட மாநிலங்களில் இன்று முதல் மூன்று நாட்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் அனைவரும் மாஸ்க் அணிந்து ஹோலி பண்டிகையை கொண்டாடுங்கள் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்
 
இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது இதனை அடுத்து பல விஐபிகள் இந்த ஆண்டு ஹோலி பண்டிகையை கொண்டாட வில்லை என அறிவித்தனர் 
 
இருப்பினும் பொதுமக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடுவது தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஹோலி பண்டிகையை கொண்டாடும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து கொண்டாடுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் 
 
பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று மிகச் சிறப்பாக ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. வாரணாசியில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் மக்கள் ஹோலி பண்டிகையை இன்று கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை முகத்திலும் உடலிலும் பூசி மகிழ்ந்தனர். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பலர் முகக்கவசம் அணிந்தே ஹோலியை கொண்டாடி வருகின்றனர்.