வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 மார்ச் 2021 (08:21 IST)

கடன் சுமையில் இருந்து மீண்டாரா கௌதம் மேனன்?… சென்னையில் இரண்டு பிளாட்கள்!

இயக்குனர் கௌதம் மேனன் சென்னையில் இரண்டு பிளாட்களை வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பாளராக மாறியதால் பல கடன் சுமைகளுக்கு ஆளானார். அதனால் அவர் இயக்கிய படங்கள் மற்றும் தயாரித்த படங்கள் என சில படங்கள் ரிலிஸ் ஆகாமலேயே முடங்கிக் கிடக்கின்றன. ஆனால் இப்போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக சிக்கல்களில் இருந்து மீண்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

அடுத்து சிம்புவை வைத்து அவர் நதிகளில் நீராடும் சூரியன்கள் படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அவர் இப்போது சென்னையின் ஓ எம் ஆர் பகுதியில் இரண்டு விலையுயர்ந்த பிளாட்களை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அவர் பொருளாதார சுமைகளில் இருந்து மீண்டு விட்டதாக சொல்லப்படுகிறது.