1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. PM Modi today visit gujarat

டவ்-தேவ் புயலால் 6 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு: பிரதமர் இன்று நேரில் ஆய்வு

டவ்-தேவ்
சமீபத்தில் அரபிக்கடலில் உருவான டவ்-தேவ் புயல் கேரளா குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் புரட்டிப்போட்டது என்பதும் குறிப்பாக குஜராத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் பெரும் சேதம் அடைந்தன என்றும் தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி குஜராத் மாநிலத்தில் டவ்-தேவ் புயால் 6 ஆயிரம் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் மீண்டும் மின்சாரம் வழங்க மின் துறையினர் இரவு பகலாக பணி செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் டவ்-தேவ் புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களை இன்று பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இன்று அவர் குஜராத் செல்லவிருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
டெல்லி முதல்வர் குற்றச்சாட்டுக்கு சிங்கப்பூர் அரசு மறுப்பு!