தொடர்புடைய செய்திகள்
- எனது மாநிலம் பற்றி எரிகிறது; தயவு கூர்ந்து உதவுங்கள்: பிரதமர் மோடிக்கு அவசர கோரிக்கை வைத்த மேரிகோம்..!
- மரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி.. கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் பரபரப்பு..!
- கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் திருமாவளவன்.. சிறப்பான வரவேற்பு..!
- ஜிஎஸ்டி வரிவசூல் புதிய உச்சம் பற்றி பிரதமர் மோடி கருத்து
- ஆயிரம் மோடிகள் வந்தாலும் தடுக்க முடியாது: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
வாக்களிக்கும்போது ‘பஜ்ரங்பலி கி ஜெய்’ என கோஷமிடுங்கள்: கர்நாடக மக்களுக்கு மோடி கோரிக்கை..!
வாக்களிக்கும் போது பஜ்ரங்பலி கி ஜெய் என கோஷம் இடுங்கள் என கர்நாடக மாநில மக்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஐந்து நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு இறுதி கட்ட பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலரும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தபோது கர்நாடக சட்டமன்ற தேர்தலில் நீங்கள் வாக்களிக்கும் போது மறக்காமல் பஜ்ரங்பலி கி ஜெய் என்று கோஷம் விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பஜ்ரங்கல் அமைப்பை தடை செய்வோம் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகள் தெரிவித்த நிலையில் அந்த அமைப்பின் கோஷத்தை ஆதரித்து பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran
