வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 மே 2023 (21:17 IST)

ஜிஎஸ்டி வரிவசூல் புதிய உச்சம் பற்றி பிரதமர் மோடி கருத்து

PM Modi
இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவசூல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் ஜிஎஸ்டி வரிவசூல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சத்தை எட்டியுள்ளது.

கடந்த  ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.167540 கோடி ஜிஎஸ்டி வரி வசூலான நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.19,485 கோடி அதிகாமாக வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கூறிய பிரதமர் மோடி’’, குறைவான அளவில் வரி விகிதம் இருந்தாலும், ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்து வருவது  ஜிஎஸ்டி  ஒருங்கிணைப்பின் வெற்றியைக் காட்டுகிறது என்று கூறினார்.

மேலும், இந்த ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளது என்பது ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பின் வெற்றியைக் காட்டுகின்றது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.