1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. pakistan plan bomb blast in india

5 மாநில தேர்தலுக்கு முன் வெடிகுண்டு தாக்குதலா? உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியா
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது
 
நேற்று அபுதாபியில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற ஐந்து மாநிலங்களிலும் பாகிஸ்தானில் உள்ள ஒரு சில தீவிரவாத அமைப்புகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இதற்கு முன்னோட்டமாக தான் டெல்லியில் சமீபத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மேலும் சில இடங்களில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் உளவுத்துறை சுட்டிக்காட்டி உள்ளது
 
எனவே ஐந்து மாநில தேர்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
அடுத்த கட்டுரையில்
நாகா்கோவில்-சென்னை வாராந்திர ரயில் சேவையில் மாற்றம்