வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (11:43 IST)

பிரதமர் மோடி பேசிய அந்த வார்த்தையை நோட் செய்த ஆக்ஸ்போர்டு! – 2020க்கான இந்தி வார்த்தை!

கடந்த ஆண்டில் இந்தியாவில் இந்தி மொழியின் வார்த்தையாக பிரதமர் மோடி பேசிய வார்த்தையை ஆக்ஸ்போர்டு தேர்ந்தெடுத்துள்ளது.

ஆண்டுதோறும் ஒவ்வொரு மொழியிலும் சிறந்த வார்த்தை ஒன்றை தேர்ந்தெடுத்து அந்த ஆண்டிற்கான அந்த மொழியின் வார்த்தையாக ஆக்ஸ்போர்டு அடையாளப்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2020ம் ஆண்டிற்கான இந்தி வார்த்தையாக பிரதமர் மோடி உச்சரித்த ‘ஆத்மநிர்பார் பாரத்” தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில் ஆத்மநிர்பார் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 20 லட்சம் கோடி அளவிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. அதை தொடர்ந்து பிரதமர் மோடி பல இடங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பொருளாதார ரீதியாக முன்னேறவும், தடுப்பூசிகள் கண்டறியவும் ஊன்றுகோலாக இருந்த வார்த்தையாக ஆத்மநிர்பார் பாரத் உள்ளதாக ஆக்ஸ்போர்டு தெரிவித்துள்ளது.