ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2020 (15:03 IST)

இந்த மாதம் 26 ஆம் தேதி அட்சயத் திரிதியை! தங்க விற்பனைக்கு புது ஐடியா!

அட்சயத் திருதியை முன்னிட்டு ஆன்லைனில் தங்கம் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ள நகை வியாபாரிகள்.

கொரோனா காரணமாக அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் தங்க நகை விற்பனையும் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தங்கம் விற்பனை நடக்கவில்லை என்றாலும் தங்கம் விலை மட்டும் ஏடாகூடாமாக எகிறி வருகிறது.

இந்த மாதம் 26ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. அந்த நாளில் தங்கம் வாங்குவது அதிர்ஷ்டமானது என்ற தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் ஒரு நம்பிக்கை உலவிக் கொண்டு இருக்கிறது. இதை முன்னிட்டு நகைகளை இணையதளம் வாயிலாக விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி ஆன்லைனில் தங்கம் வாங்கும் நாளில் என்ன விலை விற்கப்படுகிறதோ அந்த தொகையை செலுத்த வேண்டும். அதற்கான ஆவணம் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். ஊரடங்கு முடிந்தவுடன் வாடிக்கையாளர்களுக்கு நகை அனுப்பி வைக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.